search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயிஷா சய்கல்"

    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் முன்னோட்டம். #Junga #VijaySethupathi
    வி.எஸ்.பி.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் `ஜுங்கா'. 

    விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் மடோனா செபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதா ரவி, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நேகா சர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    ஒளிப்பதிவு - டூட்லி, இசை - சித்தார்த் விபிண், பாடலாசிரியர் - லலித் ஆனந்த், எடிட்டிங் - வி.ஜே.ஷாபு ஜோசப், நடனம் - ராஜூ சுந்தரம், சண்டைப்பயிற்சி இயக்குநர் - அன்பறிவு, தயாரிப்பு - விஜய் சேதுபதி, வெளியீடு - ஏ & பி குரூப்ஸ், எழுத்து, இயக்கம் - கோகுல். 



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி இயக்குநர் கோகுல் பேசுகையில், 

    ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம்' என்றார். 

    படம் வருகிற ஜூலை 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. #Junga #VijaySethupathi

    ஜுங்கா டிரைலர்:

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 37-வது படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், படக்குழுவில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார். #Suriya37
    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்ட பலரும் ஒப்பந்தமாகியுள்ளனர். 

    கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேதி பிரச்சனையால் படக்குழுவில் இருந்து விலகுவதாக அல்லு சிரிஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அல்லு சிரிஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

    `தற்போது தெலுங்கில் உருவாகும் ஏபிசிடி படத்தில் நடித்து வருகிறேன். இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடப்பதால் சூர்யா படத்தில் என்னால் இடம்பெற முடியவில்லை. படப்பிடிப்பை வேறு தேதியிலும் மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நானாகவே இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 

    இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு எனது சூழ்நிலை புரியும். அவர் தனது முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்த குழுவுடன் பணியாற்ற விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

    இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். #Suriya37 #AlluSirish

    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் ‘ஜுங்கா’ படம் இந்த மாதம் 27-ஆம் தேதியன்று ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. #Junga #VijaySethupathi
    நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விஜய் சேதுபதி பேசுகையில், ‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம். 

    அதன் பிறகு தான், அருண் பாண்டியன் வந்தார். படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார். இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின் போது சொன்னார். 



    ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒரு வரி என்ன என்று கேட்டார். அதன் பிறகு தணிக்கைக்கு அனுப்பும் போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை பார்த்தார். நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அது தான் ஆச்சரியமான விசயம். 

    மடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கொண்டு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.



    ஆண்டவன் கட்டளைக்கு பிறகு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படப்பிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ அதை பேசி அசத்துவார். இந்த படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம். உங்களின் சுவைக்காக இம்மாதம் 27 ஆம் தேதியன்று சமர்பிக்கிறோம்.’ என்றார்.

    இந்த விழாவில் இயக்குநர் கோகுல் பேசுகையில், ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம் என்றார். #Junga #VijaySethupathi

    பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் தமிழகத்தில், மக்கள் நல்ல தலைமையை தேடுகிறார்கள் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். #VijaySethupathi #Junga
    விஜய்சேதுபதி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் ஜுங்கா. இந்த படத்தின் வெளியீட்டையொட்டி அவர் அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஜுங்கா படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்கியது ஏன்?

    பதில்:- நடிகர்களின் வியாபாரத்தை பொறுத்தவரை சில வரைமுறைகள் வைத்து இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த வரைமுறை கணக்கில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பல மர்மங்கள் நிறைந்த அலிபாபா குகை போல சினிமா வியாபாரம் மற்றும் வசூல் கணக்கு மாறிவிட்டது.

    ஒரு நல்ல கதையை வியாபாரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஆகும் செலவை சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எந்த சூழ்நிலையிலும் உங்கள் பட்ஜெட்டை இறக்காதீர்கள் என்று அச்சப்படுத்துகிறார்கள். மார்க்கெட் என்ற பெயரில் கதாநாயகர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

    அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படம் என்ன கேட்கிறதோ அதை செலவழித்து படம் எடுத்து வியாபாரம் செய்வதே சரியானதாக இருக்கும்.

    மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்றும் கட்டம் கட்டுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

    என்னுடைய நிறைய படங்கள் சினிமாக்காரர்களால் ஏளனமாக பார்க்கப்பட்டவை. ஆனால் மக்கள் வரவேற்பை பெற்றவை. எனக்கு இயக்குனர் கோகுல் மீது இருந்த நம்பிக்கையே ஜுங்காவின் பிரம்மாண்டத்துக்கு காரணம்.

    எல்லா நடிகர்களுக்கும் எல்லா வகை படங்களும் பண்ண விருப்பம் இருக்கும். ஆனால் வியாபார பயம் தான் அவர்களை யோசிக்க வைக்கிறது. சினிமாவை எல்லாருமே நேசித்து தான் வருகிறார்கள்.

    வரைமுறை எதுவும் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என்பதற்கு உதாரணம் பாகுபலி. வாய்வழி விளம்பரம் தான் இங்கே முக்கியம். மக்களுக்கு பிடித்தால் போதும்.



    கே:- நடிகர்களின் சம்பளம் அதிகமாகி விட்டதாக ஒரு குறை சொல்லப்படுகிறதே?

    ப:- எல்லாமே இங்கே டிமாண்டை பொறுத்து தான். உங்களுக்கான மார்க்கெட் தேவை இல்லாவிட்டால் ஒரு ரூபாய் அதிகமாக கேட்டால் கூட கொடுக்க மாட்டார்கள். நான் சினிமாவுக்கு வெளியில் இருந்தபோது அப்படிதான் தெரிந்தது. ஆனால் உள்ளே வந்தபிறகு தான் கதாநாயகர்களின் சம்பளம் அவர்கள் நிர்ணயித்துக் கொள்வதில்லை. அது மற்றவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது புரிகிறது.

    கே:- ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்?

    ப:- ரஜினியை ஒரு பல்கலைக்கழகமாக பார்க்கிறேன். அந்த பல்கலைக்கழகத்தில் மாணவனாக கற்றுக்கொள்ள ஆவலோடு இருக்கிறேன். அவரிடம் வீழ்ந்தாலும் எனக்கு பெருமையே. நான் சம்பாதித்தது போதும். நிறைவான வேடங்களில் நடிக்க தான் விரும்புகிறேன்.

    அது வில்லனாக இருந்தாலும் சரி, சில நிமிடங்கள் வந்தாலும் சரி. எனக்கு பிரச்சினை இல்லை.

    கே:- விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எழும் எதிர்ப்புகள்?

    ப:-என் தந்தைக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. சண்டை போட்டு, கண்டித்து, பிடிவாதமாக இருந்து, பேசாமல் இருந்து அதை நிறுத்த வைத்தேன். ஆனால் எனக்கும் அதே பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் புகைபிடிக்காதே என்றார். பின்னர் நிறுத்தினேன்.

    என் உடனேயே வாழ்ந்து புகையால் இறந்த ஒருவர் சொல்லியே என்னால் கடைபிடிக்க முடியவில்லை. புகை தீங்கானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சினிமாவால் தான் புகை பழக்கம் அதிகமாகிறது என்பதில் உடன்பாடு இல்லை.



    ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும்போது அது தேவைப்பட்டால் தவிர்க்க முடியாதே... அப்படி பார்த்தால் வில்லன் என்ற கதாபாத்திரமே இல்லாமல் தான் சினிமா எடுக்க வேண்டும்.

    கே:- தமிழ்நாட்டுக்கு இப்போது ஒரு தலைமைக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. எப்படிப்பட்டவர் பூர்த்தி செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    ப :- மக்கள் இதுவரை தி.மு.க. அதிமுக இரண்டு ஆட்சிகளையும் மாறி மாறி பார்த்து இருக்கிறார்கள். முன்பு இதுபோன்ற பாதுகாப்பில்லாத சூழல் இல்லை. இப்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதுகாப்பில்லாத சூழல் தான் தலைமையை தேடுகிறது.

    அது சரியாகிவிடும் என்று நம்புகிறேன். இந்த கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது. மக்களிடத்தில் ஒரு எரிச்சல் இருக்கிறது. ஓட்டு போடும் நாள் வரும்போது மக்கள் இதற்கான பதிலை தருவார்கள்.

    ப:- நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது. இங்கு எல்லோரும் வரலாம். ஆனால் நான் வரமாட்டேன். எனக்கு அந்த அறிவு இல்லை. யார் வந்தாலும் சாதி அரசியலை ஒழிக்க வேண்டும். அதுதான் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். சாதி முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VijaySethupathi #Junga

    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். #Suriya37 #KVAnand
    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் லண்டனில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. படம் அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் திரைக்கு வர இருக்கிறது. #Suriya37 #KVAnand

    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #Suriya37 #KVAnand
    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் லண்டனில் நடந்தது. சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருந்த கேவ்மிக் யு அரி வேறு படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக அபிநந்தன் ராமானுஜம் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand 

    செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் சூர்யா பிசியாக நடித்து வரும் நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Suriya37 #KVAnand
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் இன்று துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    சூர்யா விரைவில் லண்டனில் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். 



    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand

    என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. #Suriya37 #Sayyeshaa
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

    இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். 



    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37 #Sayyeshaa

    `ஜுங்கா' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சரண்யா பொன்வண்ணன், என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டதாக கூறினார். #Junga #VijaySethupathi
    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்துவரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

    இதில், விஜய் சேதுபதி, சாயிஷா, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், டெல்லி கணேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, வருண், பொன்வண்ணன், சித்தார்த் விபின், அருண் பாண்டியன், ஐசரி கணேஷ் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, 

    தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பின்னர், 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த போது, என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அவரிடம், உங்களைப் போன்ற நிறைய பேர் திறமையால் உயர்ந்திருக்கிறார்கள் என்றேன். முதல் படத்தில் அவ்வுளவு பயந்து கொண்டிருந்த விஜய் சேதுபதியுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன். அதுமட்டுமில்லாமல், அவரிடம் இருந்தே சம்பளம் வாங்கியிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல குணம் தான் அவரது முன்னேற்றத்திற்கு காரணம். அவர் மேலும் வளர வாழ்த்துக்கள் என்றார். 



    கோகுல் இயக்கத்தில் நடித்தது, 10 வயது குறைந்தது போல உணர்கிறேன். அவ்வுளவு சுறுசுறுப்பு, மகிழ்ச்சியுடன் அவர் படத்தில் பணியாற்ற முடியும். ஜுங்கா வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்றார். #Junga #VijaySethupathi #Sayyeshaa

    சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தணிக்கை குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. #Ghajinikanth #Arya
    சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. 

    இந்த நிலையில், சன்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக இயக்கியிருக்கும் `கஜினிகாந்த்' படம் தணிக்கை குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான `ஹரஹர மகாதேவகி', `இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு படங்களுக்கும் தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழே கிடைத்த நிலையில், முதல்முறையாக அவரது படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



    இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா முன்னணி கதாபாத்திரத்திலும், கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், சம்பத், ஆடுகளம் நரேன், உமா பத்மநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 

    ஸ்டூடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி இசை அமைத்திருக்கிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Ghajinikanth #Arya #Sayyeshaa

    ‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் சாயிஷா, விஜய் சேதுபதி நிஜத்திலும் ஒரு ஹீரோ தான் என்று கூறியிருக்கிறார். #Junga #VijaySethupathi
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். 

    சமீபத்தில் ஜுங்கா படத்திற்காக அஸெர்பெய்ஜான் நாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து இருக்கும் சாயிஷா, விஜய்சேதுபதி பற்றி கூறும்போது `அவர் நிஜத்திலும் ஒரு ஹீரோ தான்.

    காரில் நானும் அவரும் செல்லும்போது கார் துரத்தப்பட்டு பயங்கரமாக நொறுங்கும் ஒரு காட்சியை எடுத்தோம். அப்போது டூப் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.



    முற்றிலும் ஒரு புது நாட்டில் பயங்கரமான கார் துரத்தலில் காரை ஓட்டி செல்வது என்ற ஆபத்தான செயலை மிக துணிச்சலாக செய்துகாட்டினார். அவர் கார் ஓட்டியதை பார்த்து அருகில் அமர்ந்து இருந்த நான் பயந்துவிட்டேன்' என்றார். #Junga #VijaySethupathi #Sayyeshaa

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் 37-வது படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #Suriya37
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

    இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிக்க, சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37 

    ×